மட்டக்களப்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கதல்

மட்டக்களப்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கதல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட வாகனப் போக்குவரத்து சோதனைகளில்,தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியமை
காரணமாக இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக பொலிஸார் முன்னரே அறிவித்திருந்த போதிலும், அதைப் புறக்கணித்து மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.