களுத்துறையின் சில பகுதிகளுக்கு தற்காலிக நீர் விநியோகத் தடை

களுத்துறையின் சில பகுதிகளுக்கு தற்காலிக நீர் விநியோகத் தடை

களுத்துறையில் உள்ள மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பழுதுபார்க்கும் பணிகள் இடம்பெற்று வருவதால், நாளை வெள்ளிக்கிழமை (7) காலை 08.00 மணி வரை நீர் விநியோகத் தடை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை, கிடைக்கக்கூடிய நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு குறித்தப் பகுதிகளில் வசிப்போர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share This