Author: Nishanthan Subramaniyam

பங்களாதேஷ் முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது – தாரிக் ரஹ்மான் அதிரடி உரை

Nishanthan Subramaniyam- December 26, 2025

“பங்களாதேஷானது முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.” - இவ்வாறு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் ... Read More

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவை சவாலுக்குட்படுத்துவேன்

Nishanthan Subramaniyam- December 26, 2025

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப் போவதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிக ஏற்பாடாகவே இயற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டு ... Read More

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 26, 2025

கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைப்படி பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஜி.கே.மணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் ... Read More

டிட்வா புயல் பேரிடரால் கிழக்கில் 33640 விவசாயிகள் பாதிப்பு

Nishanthan Subramaniyam- December 26, 2025

டிட்வா புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 21,272 ஹெக்டேயர் நிலப்பரப்புக்களை சேர்ந்த 33,640 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண, மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.றினூஸ் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட ... Read More

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு மீண்டும் ஒத்திவைப்பு

Nishanthan Subramaniyam- December 26, 2025

பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவான வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்க நேரிட்டுள்ளது. சபையில் நிறைவெண் இல்லாத காரணத்தினால் இவ்வாறு புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் ... Read More

அர்ச்சுனா எம்பிக்கு கொலை மிரட்டல்

Nishanthan Subramaniyam- December 26, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு கையடக்கத் தொலைபேசிகளில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே குறித்த கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் ... Read More

“திமுக அரசை அகற்றாவிட்டால் தமிழகம் பிச்சைக்கார மாநிலமாகும்” – எச்.ராஜா

Nishanthan Subramaniyam- December 26, 2025

“தமிழ்நாட்டை சூறையாடிக் கெடுக்கின்ற திமுக அரசை தூக்கியெறியவில்லை என்றால் தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமாக மாறிவிடும்.” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சாமி தரிசனம் செய்யவந்த பாஜக ... Read More

கிறிஸ்துமஸ் தினத்தில் இங்கிலாந்தில் சோகம்

Nishanthan Subramaniyam- December 26, 2025

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் கிறிஸ்துமஸ் தின நீச்சலுக்காகச் சென்ற ஒரு குழுவினர் கடுமையான கடல் அலைகளினால் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக இரண்டு பேர் கடல் அலையில் அல்லுண்டு காணாமல் போயுள்ளதாக டெவன் ... Read More

கண்டியில் பதற்றநிலை வெடிகுண்டு அச்சுறுத்தல்

Nishanthan Subramaniyam- December 26, 2025

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக கண்டி மாவட்ட செயலகத்தில் விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட ... Read More

ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ்க் கட்சிகளும் கூட்டணிக்குள் வரும் என்கிறார் ரவி கருணாநாயக்க

Nishanthan Subramaniyam- December 26, 2025

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைந்த பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் அந்த அணியில் இணையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய ... Read More

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி கோரி பேரணி

Nishanthan Subramaniyam- December 26, 2025

படுகொலை செய்யப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரும் பேரணி என்பன மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றுள்ளன. 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில், ... Read More

இஸ்ரேலின் புதிய குடியேற்றங்களுக்கு பிரிட்டன் உட்பட 14 நாடுகள் கண்டனம்

Nishanthan Subramaniyam- December 26, 2025

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அண்மையில் அளித்த அனுமதியை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 14 நாடுகள் கண்டித்துள்ளன. ‘ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களுக்கு இஸ்ரேலிய ... Read More