Author: Nishanthan Subramaniyam
செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணையே வேண்டும்
“தமிழர்களின் கருவைக்கூட அறுத்துள்ளனர் என்பதற்கு செம்மணி புதைகுழி சான்றாகும். எனவே, சர்வதேச நியமனங்களுக்கமைய சர்வதேசத்தின் ஒத்துழைப்புடனேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும்.” இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ... Read More
இலங்கையின் ‘மூன்றாவது பெரிய’ மனித புதைகுழியாக மாறியது செம்மணி
நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய ... Read More
வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி
வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விக்ரமசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளர் தெரிவுக்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு 23 உறுப்பினர்கள் வாக்களித்ததோடு, தேசிய மக்கள் சக்தியின் ... Read More
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீன சுற்றுலா பயணிகளுக்கு இந்திய விசா
கடந்த 2020-ல் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியா அனைத்து சுற்றுலா விசாக்களையும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் சீன குடிமக்களுக்கு இன்று (ஜூலை 24) முதல் மீண்டும் சுற்றுலா விசா வழங்கப்படும் என ... Read More
ஒக்டோபர் 23 இலங்கையர் தின நிகழ்வு
இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் 2026 ஆரம்பத்தில் இடம்பெறும் எனவும் அவர் கூறினார். அரச ... Read More
இன்று சில பகுதிகளில் மழையும் பலத்த காற்றும் எதிர்பார்ப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் ... Read More
புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று
முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (24) இடம்பெற உள்ளது. இந்த விவாதம் இன்று மாலை 5.30 மணி வரை நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More
மறைந்த அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரின் இறுதிக்கிரியை இன்று
மறைந்த அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் இறுதிக்கிரியை இன்று (24) இடம்பெறவுள்ளது. அதற்கமைய, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல் இன்று (24) கண்டி அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு ... Read More
ரஷ்ய, ஈரான் கடற்படை கஸ்பியன் கடலில் போர்ப்பயிற்சி
ரஷ்யாவும் ஈரானும் கூட்டு கடற்பயிற்சியை கஸ்பியன் கடற்பரப்பில் முன்னெடுததுள்ளன. இப்பயிற்சியில் ஈரான் இஸ்லாமிய புரட்சி காவலர் படையும் பங்குபற்றியுள்ளது. ரஷ்ய-ஈரானிய கடற்படைகளை உள்ளடக்கிய இப்பயிற்சியில் கடல்சார் மீட்பு மற்றும் நிவாரணப் பயிற்சிகள் முக்கிய இடத்தைப் ... Read More
வெலிக்கடை படுகொலைகள் குறித்தும் விசாரணை வேண்டும்
தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ... Read More
பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி
நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை சமீபத்தில் ... Read More
பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளது – ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா குற்றச்சாட்டு
வெறித்தனத்திலும் பயங்கரவாதத்திலும் மூழ்கியுள்ள ஒரு நாடு பாகிஸ்தான் என்றும் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு என்றும் ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியது. ... Read More












