Author: Mano Shangar
வேலன் சுவாமி வைத்தியசாலையில் அனுமதி
தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தையிட்டி விகாரைக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு ... Read More
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிள் மீட்பு
அம்பலாங்கொடையில் இன்று (22) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளனர். குருந்துவத்த - அந்ததோல சாலையில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது. ... Read More
இந்த ஆண்டு வேலைக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000ஐ கடந்தது!
இந்த வருடம் வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000 ஐ கடந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 300,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பும் இலக்கை ஏற்கனவே அடைந்துவிட்டதாக ... Read More
பண்டிகை கால பாதுகாப்பிற்காக சிறப்பு செயல்பாட்டு அறை!!
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, பண்டிகைக் காலம் முடியும் வரை செயல்பாட்டு ... Read More
கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ மட்டத்தில்
'IQAir' வலைத்தளத்தின்படி, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 'ஆரோக்கியமற்ற' மட்டங்களில் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் (20ஆம் திகதி) மற்றும் நேற்று (21ஆம் திகதி) காற்றின் தரம் 'ஆரோக்கியமற்ற' மட்டங்களில் ... Read More
உலகின் மிகப்பெரிய அணு உலையை மீண்டும் தொடங்க ஜப்பான் தீர்மானம்
2011ஆம் ஆண்டு புகுஷிமா (Fukushima) அணு உலை விபத்திற்குப் பிறகு, அணுசக்தி பயன்பாட்டில் தயக்கம் காட்டி வந்த ஜப்பான், தற்போது மீண்டும் அணுசக்திக்குத் திரும்பும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளது. உலகின் ... Read More
இலங்கையில் ஒன்லைன் நிதி மோசடி முறைப்பாடுகள் அதிகரிப்பு
ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கணினி அவசரகால பதில் மன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஒன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முற்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற ... Read More
அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மேலாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். சம்பவம் ... Read More
தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்!! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்க இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி இரவு ஏழு மணிக்கு இடம்பெறவுள்ளது. ஐந்துப் ... Read More
துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு
சிட்னி போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டத்தை அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், ... Read More
சென்னையில் பனிமூட்டம் – விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு
சென்னை உள்ளிட்ட புறநகரங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் நேரங்களில் அதிக பனிமூட்டம் ... Read More
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் – பிரதமர் உறுதி
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ... Read More












