Author: Kanooshiya Pushpakumar

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்திற்கு எதிரான மனு – விசாரணை நிறைவு

Kanooshiya Pushpakumar- January 27, 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், தனது இரகசிய தீர்ப்பை ஜனாதிபதி ... Read More

இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது உப்புத் தொகை

Kanooshiya Pushpakumar- January 27, 2025

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் அடங்கிய முதலாவது உப்புத் தொகை இன்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உப்பு உற்பத்தியில் கடுமையான பாதிப்பு ... Read More

சிறிய மாற்றத்தையும் வரவேற்போம்!

Kanooshiya Pushpakumar- January 27, 2025

(இன்றைய ஒருவன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்) நாளுக்கு நாய் இலங்கையின் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. தினம் தினம் அரங்கேறும் அரசியல் நிகழ்வுகளில் புதிய அரசாங்கத்தின் நகர்வு எவ்வாறு இருக்கிறது என்பதில் மக்களும் ... Read More

அரசாங்க சேவையின் 30,000 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப தீர்மானம்

Kanooshiya Pushpakumar- January 27, 2025

அரசாங்க சேவையில் உள்ள 30,000 அத்தியாவசிய வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனையின் கீழ், அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்புக்கான திட்டங்களை ... Read More

குழந்தைகள் மூலம் வருமானத்தை தேடாதே…

Kanooshiya Pushpakumar- January 27, 2025

(திவ்யா கோவிந்தன்)   வணிகங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கு விளம்பரம் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருந்து வருகிறது. இருப்பினும், இது குழந்தைகளை உள்ளடக்கும் போது, நெறிமுறை எல்லைகள் மங்கலாகி, அவர்களின் சுரண்டல் ... Read More

மற்றுமொரு அமைச்சரின் “பேராசிரியர்” பட்டமும் நீக்கம்!

Kanooshiya Pushpakumar- January 27, 2025

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின் பெயருக்கு முன்னால் இருந்த பேராசிரியர் என்ற பட்டத்தை எந்தவொரு ஆவணத்திலும் குறிப்பிட வேண்டாம் என அவ் அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் ... Read More

BREAKING – யோஷித ராஜபக்சவுக்கு பிணை

Kanooshiya Pushpakumar- January 27, 2025

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே ... Read More

தரமற்ற பென்சில்கள் சந்தையில் – அதிக அவதானம் செலுத்துமாறு கோரிக்கை

Kanooshiya Pushpakumar- January 27, 2025

புதிய பாடசாலை தவணைக்கு குழந்தைகளுக்கு புத்தகப் பட்டியலை தயாரிக்கும்போது தரமான பாடசாலைப் பொருட்களைப் பயன்படுத்துவதில் அதிக அவதானம் செலுத்துமாறு இலங்கை அதிபர்கள் சங்கம் ஆசிரியர்களிடம் வலியுறுத்தியுள்ளது. சந்தையில் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற பென்சில்கள் அதிக ... Read More

யோஷித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்

Kanooshiya Pushpakumar- January 27, 2025

பண மோசடி குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட யோஷித ராஜபக்ஷ, இன்று (27) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ... Read More

காலி சிறைச்சாலை மோதல் – விசாரணைகளுக்கு குழு நியமனம்

Kanooshiya Pushpakumar- January 27, 2025

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து இன்று (27) நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிப்பதாக ... Read More

UPDATE –  காலி சிறைச்சாலையில் மோதல் – நால்வர் காயம்

Kanooshiya Pushpakumar- January 26, 2025

UPDATE -  காலி சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்  சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார். இந்நிலையில், காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக காலி தேசிய ... Read More

அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

Kanooshiya Pushpakumar- January 26, 2025

பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என ... Read More