அரச ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

அரச ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

ஊழியர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்துமாறு அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்ஃபுளுவென்சா மற்றும் கொவிட்-19 பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் பி.என். தம்மிந்த குமாரவினால் சுற்றரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“இன்ஃபுளுவென்சாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், கொவிட்-19 ஆல் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்” என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This