இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாருக்கு வடக்கே அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, 02 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், கரைக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This