
குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழப்பு
வடக்கு சிரியா, மன்பிஜ் நகரப் பகுதியில் விவசாய தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகில் இருந்த காரொன்றில் குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 15 பெண்கள் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
CATEGORIES உலகம்
