போராட்டத்துக்கு தயாராகும் அரிசி மொத்த வியாபாரிகள்

போராட்டத்துக்கு தயாராகும் அரிசி மொத்த வியாபாரிகள்

அரிசி தொடர்பான பிரச்சினைக்குரிய நிலைமைக்கு தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக அரிசி சந்தையில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட அரிசி மொத்த வியாபாரிகளால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளின் சோதனைகள் அரிசி வியாபாரத்திற்கு ஒரு தடையாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசாங்கம் அரிசி பிரச்சினைக்கு சரியான தீர்வை வழங்கிய பின்னர், நுகர்வோர் விவகார அதிகாரசபை அந்த சுற்றிவளைப்புகளை செயல்படுத்த வேண்டும் என்று வணிகர்கள் கருதுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This