ஐ.ம.ச மற்றும் ஐ.தே.க இடையிலான முதல் கலந்துரையாடல்

ஐ.ம.ச மற்றும் ஐ.தே.க இடையிலான முதல் கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவது தொடர்பிலான முதலாவது கலந்துரையாடல் இன்று (20) இடம்பெறவுள்ளது.

இரு தரப்பு குழு உறுப்பினர்களிடையே குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

மேலும், இரு தரப்பினரின் முன்மொழிவுகளையும் கருத்தில் கொண்டு எதிர்காலத் தலைமை குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

CATEGORIES
TAGS
Share This