பெப்ரவரி 12ஆம் திகதிக்கு முன்னர் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு வெளியாகும்

பெப்ரவரி 12ஆம் திகதிக்கு முன்னர் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு வெளியாகும்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

விடைத்தாள் மதிப்பீடு புதன்கிழமை (8) 64 மையங்களில் தொடங்கியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திக நடைபெற்றது.

சிங்கள மொழியிலிருந்து 244,092 மாணவர்களும் தமிழ் மொழியிலிருந்து 79,787 மாணவர்களும் உட்பட மொத்தம் 323,879 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This