வலிகாமத்தில் மக்கள் போராட்டம்

வலிகாமத்தில் மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, குறித்த காணிகளின் உரிமையாளர்கள் இன்று  போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டமானது இன்று வலிகாமம் வடக்கு பகுதிகளில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருகின்றனர்.

அதன் பிரகாரம் தொழிலாளர் இன்றைய தினமும் போராட்டத்தை நடத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )