
இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விநியோகத்தில் கட்டுப்பாடு
இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, இன்று நள்ளிரவு முதல் மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இதன்படி, முன்னரைப் போன்றே ‘ஒற்றை – இரட்டை’ இலக்க முறையைப் பின்பற்றி, உரிய ஒதுக்கீட்டின் கீழ் மாத்திரமே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
