
ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானால் பாகிஸ்தான் செல்வேன் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், தான் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது நேர்மறையான திசையில் நகர்வதாகக் குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் சிறப்பானது எனப் பாராட்டிய ட்ரம்ப், ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் இஸ்லாமாபாத் செல்லத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் மற்றும் அணு ஆயுதக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.
இறுதியாக 2006ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் (George W. Bush) பாகிஸ்தான் சென்றிருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் உறுதியானால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் திகழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
