ஹார்முஸ் நீரிணையை கடக்கும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும்- ட்ரம்ப்

ஹார்முஸ் நீரிணையை கடக்கும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும்- ட்ரம்ப்

ஹார்முஸ் நீரிணை வழியாக நுழையவோ அல்லது வெளியேறவோ முயலும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகளில் பல விடயங்களில் உடன்பாடு ஏற்பட்டிருந்தாலும், அணுசக்தி தொடர்பான முக்கியமான விடயத்தில் மட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், ஹார்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து குறித்து எதிர்காலத்தில் ஒப்பந்தம் ஏற்படலாம் என்றும், ஆனால் ஈரானின் நடவடிக்கைகள் அதற்கு இடையூறாக உள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வதேச கடற்பரப்பில் உள்ள அனைத்து கப்பல்களையும் தடுத்து நிறுத்த அமெரிக்க கடற்படைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் பகுதியில் ஈரான் வைத்துள்ளதாக கூறப்படும் கண்ணிவெடிகளை அமெரிக்க கடற்படை அகற்றத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோதமான முறையில் கட்டணம் செலுத்தும் எவருக்கும் சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பான பயணம் இருக்காது என்று கூறிய அவர், அமெரிக்கா மீதோ அல்லது அமைதியான கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தும் எந்தவொரு ஈரானியரும் மிகக் கொடூரமாக அழிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த “முற்றுகை நடவடிக்கை” விரைவில் தொடங்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )