
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி ஆஷா போஸ்லே தனது 92 ஆவது வயதில் காலமானார்.
நுரையீரல் நோய் மற்றும் வயது தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளுடனும் போராடி வந்த அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் இந்திய சினிமாவை வசப்படுத்தியவர் பாடகி ஆஷா போஸ்லே.
பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி பல்வேறு ஜானர்களில் பாடி கவனம் பெற்றவர் ஆஷா போஸ்லே.
இவர் 02 தேசிய விருதுகள், தாதா சாகேப் பால்கே, பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
இசை வரலாற்றில் அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் ஆஷா போஸ்லே.
ஹேராம் படத்தில் இடம்பெற்ற ‘நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’, ‘அலைபாயுதே’ படத்தில் ‘செப்டம்பர் மாதம்’, ‘சந்திரமுகி’ படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் நாளை ( 13) மாலை 4 மணிக்கு, சிவாஜி பார்க் மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று மகாராஷ்டிர கலாசாரத் துறை அமைச்சர் ஆஷிஷ் ஷேலார் தெரிவித்தார்.
