
புதுவருட காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு
புதுவருட காலப்பகுதியினுள் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முப்படையினர், இலங்கை பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் முன்னெடுப்பில் இந்த விசேட பாதுகாப்பு பொறிமுறை செயற்படுத்தப்படுகிறது.
இந்த கூட்டு வேலைத்திட்டத்தின் மூலம், புத்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் நடைபெறவுள்ள பல்வேறு விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகளின் போது பாதுகாப்பு விவகாரங்கள் கண்காணிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்காக, கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு அறையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன், இது முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஒருங்கிணைப்புடன் கூட்டுச் செயற்பாட்டு மையமாக இயங்கும்.
