பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை அதிகரிப்பு

பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை அதிகரிப்பு

பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதல் வகுப்பு தபால்தலையின் விலை 10 பென்ஸ் அதிகரித்து தற்போது 1.80 பவுண்ட்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல், இரண்டாம் வகுப்பு தபால்தலையின் விலை விலை நான்கு பென்ஸ் அதிகரித்து 91 பென்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோக இலக்குகளை அடையத் தவறியதற்காக தபால் சேவை விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தபால்தலைகளின் விலை மீளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அனுப்பும் கடிதங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால் இந்த கட்டண உயர்வுகள் அவசியம் என ரோயல் மெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் செயல்திறன் சிறப்பாக இருந்தபோதிலும் விலை உயர்வு தொடர்வது குறித்து பல வணிக நிறுவனங்களும் நுகர்வோரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )