
தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் இன்று முதல் பிரச்சாரம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த மார்ச் 30 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நிறைவடைய 02 நாட்கள் உள்ளன.
கடந்த 02 ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியாக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. எதிர்வரும் 19 ஆம் திகதியன்று சேலத்தில் நிறைவு செய்கிறார்.
இதனிடையே அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களான காளியம்மாள், நடிகர் ரவி மரியா இன்று பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.
அதிமுக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம் நாளை முதல் 21 ஆம் திகதி வரை சென்னை, கோவை, திருச்சி, ஈரோட்டிலும், வைகைச்செல்வன் நாளை மறுதினம் 6 முதல் 21 ஆம் திகதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும், கொள்கைப்பரப்பு துணை செயலாளர் நடிகை கௌதமி எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
