உலகின் முதன்மை போர் விமானத்தை தாக்கியதா ஈரான்?
ஈரான்மீதான தாக்குதலில் பங்கேற்றிருந்த அமெரிக்காவின் F-35 போர் விமானம் அவசர நிலையைச் சந்தித்து, மத்திய கிழக்கிலுள்ள தளமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன விமானம் ஈரானிய படைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஈரான் தரப்பில் அறிவிப்பு வெளியானாலும், அமெரிக்க ராணுவம் இதன் காரணத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது பல ட்ரோன்களையும், எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் இழந்துள்ளன.
இந்நிலையில் மேற்படி தாக்குதலானது அமெரிக்காவுக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகின்றது.
உலகில் முதன்மை போர் விமானமாக F-35 விமானம் கருதப்படுகின்றது. எதிரிகளால் தாக்க முடியாதளவுக்கு மின்னல் வேகத்தில் பயனிக்க கூடியது.
இந்த விமானத்தை தாக்கிய முதல் நாடு தாங்கள்தான் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS ஈரான்
