
ஈரானிய எரிவாயு வயல் மீதான தாக்குதல்: எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்வு
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலைக் கொண்டுள்ள ஈரானின் சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இது உலகம் முழுவதும் புதிய பணவீக்க அலை ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரபு ஊடக அறிக்கைகளின்படி, உலகளாவிய தர அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் ஐந்து உயர்ந்து ஒரு பீப்பாய் 108 டொலரைத் தாண்டியுள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்க கச்சா எண்ணெயான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்டின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தெற்கு மாகாணமான புஷேரின் கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள, உலகின் மிகப்பெரிய எரிவாயு இருப்புநிலையான சவுத் பார்ஸின் வசதிகளை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் அச்சுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
