
அரவம் தீண்டி மல்லாவியில் ஒருவர் உயிரிழப்பு
அரவம் தீண்டிய நிலையில் மல்லாவியில் ஒருவர் நேற்றையதினம் (11.03.2026) மாலை உயிரிழந்துள்ளார்.
வயலை பார்க்க சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான திருநாவுக்கரசு கிருபாகரன் வயது 55 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான பரிசோதகராக கடமை ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
