
தெற்கு லெபனானில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
தெற்கு லெபனான் பகுதியில் உள்ளவர்களை அவசரமாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
லிட்டானி நதிக்கு தெற்கே உள்ள ஹெஸ்பொல்லாஹ் குழுவினரின் நடவடிக்கைகள் காரணமாக இஸ்ரேல் அவர்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் அவிச்சே அத்ரே தெரிவித்துள்ளார்.
” வீடுகளிலிருந்து வெளியேறி, லிட்டானி நதிக்கு வடக்கே உடனடியாகச் செல்லுமாறு நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என
அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் ஆரம்பித்ததிலிருந்து 486 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
