
சீமானின் கொடியுடன் கச்சத்தீவில் படகு – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமானின் கொடியுடன் படகொன்று இன்று கச்சத்தீவு கடல்பரப்பில் சென்றுள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்ள இந்த படகு பயணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என்றும் அது தமிழகத்தின் சொத்து என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையிலேயே சீமானின் கொடியுடன் படகொன்று இன்று கச்சத்தீவு கடல் பரப்பில் பயணித்துள்ளது.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
