
மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் நாளை (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 6.00 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளன.
தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
