
மின் கட்டண முன்மொழிவு – பொதுமக்களின் பரிந்துரைகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்
மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவு குறித்து பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
மார்ச் 18 ஆம் திகதி வரை கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவை மதிப்பாய்வு செய்த பின்னரான ஆலோசனைக் குறிப்பை www.pucsl.gov.lk இல் அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கு, அதாவது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை மின்சார கட்டணத்தை 13.56% அதிகரிக்க மின்சார சபை அண்மையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியது
