
நிலக்கரி குறித்த பிரச்சினையை ஆராய குழு நியமனம்
நிலக்கரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்கென நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க எரிசக்தி அமைச்சின் செயலாளரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்படி,மொரட்டுவை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களைக் கொண்ட மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
