
சர்வதேச போதை பொருள் மன்னன் எல் மென்சோ சுட்டு கொலை!! மெக்சிகோவில் உச்சக்கட்ட பதற்றம்
மெக்சிகோ இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகில் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
எல் மென்சோ மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், எல் மென்சோ உயிரிழந்ததை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சும் உறுதி செய்துள்ளது.
மெக்சிகோவில் போதைப் பொருள் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிக்க மெக்சிகோவே காரணம் என டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மெக்சிகோ இராணுவம் முன்னெடுத்திருந்த நடவடிக்கையில் உலகின் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ கொல்லப்பட்டுள்ளார்.
நெமேசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வான்டஸ் என்றும் அறியப்படும் எல் மென்சோ கொல்லப்பட்டுள்ளது போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான மிக முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
மென்சோவின் மரணத்தை தொடர்ந்து மெக்சிகோவின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜலிஸ்கோ உட்பட மெக்ஸிகோவின் பல மாநிலங்களில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், ஆயுதம் ஏந்திய கும்பலால் முக்கிய நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. இதனால் மெக்சிகோ முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள்கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவிபத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
