அக்குரேகொட கொலை சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

அக்குரேகொட கொலை சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து வந்த நபர் ஒருவர் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ளார்.

கஹதுவ பிரதேசத்தைச் சேர்ந்த அவர், இந்தக் கொலையை வழிநடத்தியதாகக் கூறப்படும் ‘கரந்தெனிய சுத்தா’ எனப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, துப்பாக்கிதாரியை ஏற்றிச் சென்ற காரும், நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதற்காக வாடகைக்கு அமர்த்திய காரும் இன்று (21) பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )