இந்தியாவில் ஏஐ தொழில்​நுட்​பம் மிக வேக​மாக வளர்​ந்து வருகிறது

இந்தியாவில் ஏஐ தொழில்​நுட்​பம் மிக வேக​மாக வளர்​ந்து வருகிறது

இந்தியாவில் ஏஐ தொழில்​நுட்​பம் மிக வேக​மாக வளர்​ந்து வருவதாக கூகுள் தலை​மைச் செயல் அதி​காரி சுந்​தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு அவர் கூறியுள்ளதாவது,

ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினத்​தில் கூகுள் சார்​பில் 15 பில்​லியன் டாலர் முதலீட்​டில் ஏஐ மையம் அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் ஏராள​மானோருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஏஐ தொழில்​நுட்​பங்​கள் உரு​வாக்​கப்​படுவதன் ஊடாக இந்​தியா முழு​வதும் தொழில் வாய்ப்​பு​கள் பெரு​கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்​தியா, அமெரிக்​காவை இணைக்​கும் வகை​யில் கடலுக்கு அடி​யில் ஆப்​டிக் கேபிள்​கள் பதிக்​கப்​படும். இந்திய அரசு செயற்கை நுண்​ணறிவு தொழில் நுட்​பத்​தின் மூலம் விவ​சா​யிகளுக்கு வானிலை முன்​னறி​விப்​பு​களை வழங்​கு​கிறது. இந்த முயற்​சியை பாராட்​டு​வதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுமார் 20 ஆண்​டு​களுக்கு முன்பு யூ டியூப் மூலம் பணம் சம்​பா​திக்க முடி​யும் என்று எவரும் நினைத்​துப் பார்க்​க​வில்​லை. இப்​போது லட்​சக்​கணக்​கானோர் யூடியூப் மூலம் லாபம் பெறுகின்​றனர்.

இன்​றைய காலத்​தில் ஏஐ தொழில்​நுட்​பம் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இந்த தொழில்​நுட்​பம் தொழில் துறை​யில் மிகப்​பெரிய மாற்​றங்​களை ஏற்​படுத்​தும். புதிய வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் என்றும் கூகுள் தலை​மைச் செயல் அதி​காரி சுந்​தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுளின் டீப்​மைண்ட் நிறு​வனம், ஏஐ தொழில்​நுட்​பத்​தின் மூலம் ஆல்​பா​போல்ட் என்ற மாடலை உரு​வாக்​கியது. இதன்​மூலம் புரோட்​டீனின் 3 டி வரைபடம் உருவாக்கப்பட்டது. இதன் காரண​மாக மருத்​து​வத் துறை​யில் மிகப்பெரிய புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது. ஏஐ தொழில்​நுட்​பத்​தால் கோடிக்​கணக்​கான மக்​களின் வாழ்க்​கைமேம்​படும் எனவும் அவர் வலியுறு்தியுள்ளார்.

அறி​வியல் துறை​யில் மிகக் கடின​மான பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காண முடி​யும் என்றும் சுந்​தர் பிச்சை மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )