
வடக்கு லண்டனில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்
வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதால் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை 50 இற்கும் அதிகமான சிறுவர்கள் தட்டம்மை நோய் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளதுடன், இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் பெற்றோர் தமது பிள்ளைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக தட்டம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தட்டம்மை தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தங்கள் பிள்ளைகளுக்கு செலுத்தப்பட்டதை உறுதி செய்துகொள்ளுமாறும் பெற்றோருக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
