
பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளையைச் சேர்ந்த 58 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அலகினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
