பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஒரு நாகரீகமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் பெரிதும் மதிக்கிறது. ஆசிரியர்களின் தொழில்சார் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும், தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கும் ‘கல்விச் சபை’ ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.

பாடசாலைகளுக்கு இடையிலான உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )