
எப்ஸ்டீன் சம்பவம் – எலான் மஸ்க்கின் புதிய அறிவிப்பு
ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகளில் உண்மை கூறுவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் விவகாரம் குறித்து உண்மைகளை வெளிப்படையாகக் கூறி, அதன் காரணமாக யாராவது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டால், அவர்களுக்கான சட்டப் போராட்டச் செலவுகளை தாமே ஏற்பதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக எப்ஸ்டீன் தொடர்பான இரகசிய ஆவணங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தத் தகவல்களை மறைக்க முயல்வோருக்கு எதிராகவும் போராடுபவர்களுக்குத் தனது X தளம் ஆதரவாகவும் இருக்கும் என்பதையும் எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.
CATEGORIES உலகம்
