சுதந்திர தினத்தில் போர் வெற்றி பற்றிப் பேச ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை – நாமல் எம்.பி குற்றச்சாட்டு

சுதந்திர தினத்தில் போர் வெற்றி பற்றிப் பேச ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை – நாமல் எம்.பி குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களின் போர் வெற்றியைப் பற்றிப் பேச ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தைரியம் இல்லை என்று குற்றம் நாடாளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

உலக நாடுகள் தங்கள் சுதந்திர தினங்களில் படைப்பிரிவுகள் மற்றும் பிரிவுகளின் வெற்றிகளைப் பற்றி பெருமையாகப் பேசுகின்றன, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் வெற்றிகள் கூட பேசப்படுகின்றன.

டித்வா சூறாவளியின் போது ஆயுதப்படைகளின் பங்களிப்பு பற்றி ஜனாதிபதி பேசினார், ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வீரர்களின் வெற்றிகளைப் பற்றிப் பேச அவருக்கு தைரியம் இல்லை.

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி இனவெறி என்று அரசாங்கம் நினைத்தால், அது அப்படியல்ல. நாங்கள் தமிழ் சமூகத்திற்கு எதிராகப் போராடவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )