
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார்.
