
சுதந்திர தினத்தால் தமிழர் தாயகப் பகுதியில் அமைதியின்மை
கிளிநொச்சியில் தற்போது இடம்பெற்று வரும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கரிநாள் போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள திறன்விருத்தி நிலையத்தில் மூவின மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்டோர் இணைந்து நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் அப்பகுதியில் இடம்பெற்ற நிலையில், அங்கு இரு சாராருக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சம்பவ இடத்தில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டதோடு, விசேட அதிரடிப் படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு நீதி வேண்டி கடும் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

