சமல் ராஜபக்ஷவின் மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சமல் ராஜபக்ஷவின் மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் ஷமிந்திர ராஜபக்ஷவை மூன்றாவது சந்தேகநபராக பெயரிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் உள்ள சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )