
70 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது
காலி, பெந்தர பகுதியில் 70 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால்
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளை விநியோகிக்க முயன்றபோது அவர்க கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 5 கிலோ கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
