வடமேற்கு பாகிஸ்தானில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம் – தலிபான்களுக்கு எதிராக இராணுவம் நடவடிக்கையா?

வடமேற்கு பாகிஸ்தானில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம் – தலிபான்களுக்கு எதிராக இராணுவம் நடவடிக்கையா?

பாகிஸ்​தானின் வடமேற்கு பகு​தி​யில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்​தில் தெஹ்ரிக்​-இ-தலி​பான் பாகிஸ்​தான் (டிடிபி) என்ற தீவிர​வாத அமைப்பு செயல்​படு​கிறது.

ஆப்​கானிஸ்​தான் தலி​பான்​களு​டன் தொடர்பு வைத்​திருப்​ப​தாகக் கருதப்​படும் டிடிபி, பாகிஸ்​தான் அரசுக்கு எதி​ராக செயல்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், மீண்​டும் டிடிபி அமைப்​பினர் மீது ராணுவம் தாக்​குதல் நடத்​தப்​போவ​தாக​வும், ஜனவரி 23ஆம் திகதிக்குள் திரா பகு​தியை விட்டு வெளி​யேறு​மாறும் மசூதி ஒலிபெருக்​கி​கள் மூலம் ஒரு மாதம் முன்பே அறி​விப்பு வெளி​யிடப்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது.

இதையடுத்​து, அப்​பகு​தி​யைச் சேர்ந்த சுமார் 70,000-க்​கும் அதிகமான மக்​கள் தங்​கள் வீடு​களை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இவர்​களில் பெரும்​பாலானோர் பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் ஆவர்.

இதுகுறித்து பாகிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சர் கவாஜா முகமது ஆசிப் கூறியுள்ளதாவது, “திரா நகரில் எந்த ராணுவ நடவடிக்​கை​யும் எடுக்​கப் போவ​தில்​லை. மாறாக அங்கு நில​வும் கடும் குளிரே மக்களின் இடப்​பெயர்ச்​சிக்​குக் காரணம்” என்​றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )