
பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் மகன் காலமானார்!
பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின்மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார்.
மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தாயுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணா இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், இசை ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இசை உலகுக்கு அளவற்ற சேவை செய்த ஜானகியின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம், ரசிகர்களின் மனங்களையும் கனத்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது
