சம்பா, கீரி சம்பா நெல்லுக்கான குறைந்தபட்ச விலை அதிகரிப்பு

சம்பா, கீரி சம்பா நெல்லுக்கான குறைந்தபட்ச விலை அதிகரிப்பு

சம்பா மற்றும் கீரி சம்பா செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அந்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது குறித்த அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு,

அடுத்த போகத்திலிருந்து நெல்லின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பா மற்றும் கீரிசம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அரிசியின் விலையில் எந்தவித அதிகரிப்பும் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெல்லின் விலையில் திருத்தம் செய்வது குறித்து ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும், குறிப்பாக நாடு நெல் 120 ரூபாயாக இருக்கும் என்றும், சம்பா நெல்லின் விலை 125 இலிருந்து 130 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அதே சமயம், கீரி சம்பாவின் விலை விவசாயிகளின் தரப்பைப் பொறுத்து 132 இலிருந்து 140 ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )