தமிழகம் முழு​வதும் ஒரு லட்​சம் பொலி​ஸார் பாது​காப்பு பணியில்

தமிழகம் முழு​வதும் ஒரு லட்​சம் பொலி​ஸார் பாது​காப்பு பணியில்

தமிழகம் முழு​வதும் ஒரு லட்​சம் பொலி​ஸார் பாது​காப்பு மற்​றும் கண்​காணிப்​புப் பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்டுள்​ளனர்.

தமிழகத்தில் புத்தாண்டு கொண்​டாட்​டத்தை முன்​னிட்டு நட்​சத்​திர விடு​தி​கள், பண்ணை வீடு​களுக்கு கடும் கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன.

ஆங்​கிலப் புத்தாண்டுக்கு 02 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கொண்​டாட்​டத்​தில் ஈடுபட பொது​மக்​கள் தயா​ராகி வரு​வதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

டிசம்​பர் 31 ஆம் திகதி மாலை 6 மணிக்​கு ஆரம்பமாகி அடுத்த நாள் அதி​காலை வரை நடை​பெறும் புத்தாண்டு நிகழ்ச்​சிகளில் எவ்​வித அசம்​பா​வித​மும் நிகழாமல் தவிர்ப்​ப​தற்​காக பொலிஸார் பல்​வேறு பாது​காப்பு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனையிட்டு பதிவு செய்வது, அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, நிகழ்ச்சி மற்றும் விருந்து நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனு​ம​திக்​கப்​பட்ட அரங்​கத்​தில் மட்​டுமே புத்தாண்டு நிகழ்ச்​சிகளை நடத்​து​வது உள்​ளிட்ட பல்​வேறு கட்டுப்பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன.

கேளிக்கை நிகழ்ச்​சிகளின்​போது பெண்​களை கேலி செய்​வதைத் தடுக்க போது​மானபாது​காப்பு ஊழியர்​களை குறிப்​பாக பெண் பாது​காவலர்​கள் நியமிக்க வேண்​டும் என கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன.

கட்​டுப்​பாடு​களை மீறும் ஹோட்​டல்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மட்​டுமின்றி நெல்​லை, மதுரை, திருச்​சி, கோவை உட்பட அனைத்து மாவட்​டங்​களி​லும் பாது​காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )