வவுனியா,செட்டிகுளம் பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பலி

வவுனியா,செட்டிகுளம் பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பலி

வவுனியா,செட்டிகுளம் – வீரபுரம் பிரதேசத்தில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொலைபேசி உரையாடல் ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குழுவொன்றினால் அந்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, தவசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 19 மற்றும் 22 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை செட்டிகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்வதற்காக செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )