
ஹெரோயின் போதைப்பொருளுடன் பாணந்துறையில் ஒருவர் கைது
60 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, வேகட பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபருடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES இலங்கை
