ரயில் சேவையில் பெண்கள் – ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

ரயில் சேவையில் பெண்கள் – ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளார்.

இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, இரண்டு பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இவ்வாறு கூறினார்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )