மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்தில் பராமரிக்க இந்த வான் கதவு திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )