பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாவதுடன்
பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் திறந்த வெளியிலோ அல்லது மரங்களுக்கு அடியிலோ நிற்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )