
அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரிப்பு
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது.
கண்டி மாவட்டம் அதிகளவான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 356 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல மாவட்டங்களில் தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
